ஆப்நகரம்

போலீஸ் தேடுவதால் நடிகை மைனா எந்த நேரமும் கூண்டில் அடைக்கப்பட வாய்ப்பு

நடிகை மைனா என்கின்ற நந்தினி, தன் கணவர் கார்த்திக்கின் தற்கொலை தொடர்பான வழக்கில் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

TNN 14 Apr 2017, 2:39 pm
சென்னை : நடிகை மைனா என்கின்ற நந்தினி, தன் கணவர் கார்த்திக்கின் தற்கொலை தொடர்பான வழக்கில் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Samayam Tamil tamil tv actress mynaa nandhinis husband commits suicide case
போலீஸ் தேடுவதால் நடிகை மைனா எந்த நேரமும் கூண்டில் அடைக்கப்பட வாய்ப்பு


நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்து, அதில் என் தற்கொலைக்கு காரணம், நந்தினியின் தந்தை என்றும், என் உடலை என் முன்னாள் காதலில் வெண்ணிலாவின் பக்கத்தில் புதைக்க வேண்டும் என விரும்புகிறேன் என உருக்கமாக எழுதியுருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில், நந்தினி மற்றும் அவரது தந்தை மீது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் கார்த்திக்கின் தாயார் புகார் அளித்துள்ளார்.

இதன்காரணமாக நந்தினி தரப்பு தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்தது. இதனால் நந்தினி மற்றும் அவரது தந்தை விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அதே சமயம், இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்