ஆப்நகரம்

ஜோதிகாவின் ராட்சசி படத்தை தடை செய்ய வேண்டும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார்!

ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Samayam Tamil 17 Jul 2019, 8:01 pm
இயக்குனர் கௌதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் கடந்த 8ம் தேதி திரைக்கு வந்த படம் ராட்சசி. ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பு பெற்று திரையில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் இளமாறன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Samayam Tamil jo


காமெடி நடிகர் விவேக்கின் அம்மா மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!

அப்போது பேசிய அவர், அரசு பள்ளிகளை கேவலப்படுத்தியும், அரசு பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இந்த காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது படத்தை தடை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Bigil: ஏற்கனவே கேட்ட பாட்டு தானே: விஜய் பாடலை கிண்டலடித்த கஸ்தூரி!

மேலும், இது தொடர்பாக தணிக்கை துறை அதிகாரிகளையும் சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், இப்படத்தில் காட்டப்பட்டிருப்பது போன்று அரசு பள்ளி ஆசிரியர்களே தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயங்குவது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் பதிலளிக்க தயங்கிய நிலையில், படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா முத்தத்திற்கு நோ சொன்ன சாய் பல்லவி!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்