ஆப்நகரம்

#MeToo: நானா படேகருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்யுங்க: தனுஸ்ரீ தத்தா வலியுறுத்தல்!

மும்பை: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நானா படேகருக்கு உண்மைச் சோதனை நடத்துமாறு நடிகை தனுஸ்ரீ தத்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 14 Oct 2018, 6:35 am
10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியில் ‘Horn Ok Pleassss' என்ற படத்தின் சிறப்பு பாடல் ஒன்று படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட நடிகை தனுஸ்ரீ தத்தாவிற்கு, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Samayam Tamil Nana


இதுதொடர்பாக மும்பை ஓஷிவரா காவல் நிலையத்தில் தனுஸ்ரீ தத்தா புகார் அளித்துள்ளார். அதன்படி நானா படேகர், நடன கலைஞர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீ சித்திக் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூவரையும் கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை, நார்கோ அனலைசிஸ், பிரைன் மேப்பிங் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று தனுஸ்ரீ தத்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய தனுஸ்ரீயின் வழக்கறிஞர் நிதின் சத்புதே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சமூக பெரிய அந்தஸ்து பெற்றவர்கள். அரசியல் தொடர்பு கொண்டவர்கள்.

எனவே எங்களுக்கு அழுத்தம், அச்சம், மிரட்டல் விடுக்கக்கூடிய சூழல் இருக்கிறது என்று கூறினார். நடிகை தனுஸ்ரீ தத்தா மகாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணையம், துணை ஆட்சியர் ஆகியோரிடம் தனக்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tanushree Dutta Demands Lie-Detector Test For Nana Patekar, Other Accused.

அடுத்த செய்தி

டிரெண்டிங்