ஆப்நகரம்

பெப்சியில் மீண்டும் சேர்க்கக் கோரி டெக்னீஷியன்கள் உண்ணாவிரதம்!

பெப்சி அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட டெக்னீஷியன் யூனியனை மீண்டும் சேர்க்கக் கோரி டெக்னீஷியன்கள் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

TNN 21 Sep 2017, 3:15 pm
பெப்சி அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட டெக்னீஷியன் யூனியனை மீண்டும் சேர்க்கக் கோரி டெக்னீஷியன்கள் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
Samayam Tamil technicians demand fast reunion in fefsi
பெப்சியில் மீண்டும் சேர்க்கக் கோரி டெக்னீஷியன்கள் உண்ணாவிரதம்!


பெப்சி அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட டெக்னீஷியன் யூனியன் தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர். மதுரையில் நடைபெற்ற ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பின் போது பேட்டா தொடர்பாக டெக்னீஷியன் யூனியனை சேர்ந்தவர்கள் பிரச்னையை கிளப்பினர். இதனால் பாதியில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பெப்சியில் அங்கம் வகிக்கும் டெக்னீஷியன் யூனியன், தன்னிச்சையாக பேட்டா பிரச்னையை எழுப்பி, படப்பிடிப்பை நிறுத்தியதற்காக அந்த அமைப்பை பெப்சியிலிருந்து நீக்கினர்.

இந்த நீக்கத்தை கண்டித்தும் பெப்சியில் டெக்னிஷியன் யூனியனை மீண்டும் சேர்க்கக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டெக்னீஷியன் யூனியனை சேர்ந்த 500க்கும் அதிகமானவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்