ஆப்நகரம்

தெலங்கானா என்கவுண்டர்: சமந்தா சொல்வது தான் சரி

தெலங்கானாவில் நடந்த என்கவுண்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சமந்தா.

Samayam Tamil 6 Dec 2019, 4:05 pm
தெலங்கானாவில் கடந்த 27ம் தேதி 27 வயது கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 பேரை போலீசார் இன்று என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். போலீசாரின் நடவடிக்கையை மக்கள் பாராட்டியுள்ளனர்.
Samayam Tamil samantha


சமூக வலைதளங்களில் சாதாரண மக்களும், பிரபலங்களும் திஷாவுக்கு நீதி கிடைத்துவிட்டது என்று கூறி தெலங்கானா போலீசாரை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து சமந்தா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஐ லவ் தெலங்கானா. பயம் தான் சிறந்த தீர்வு. சில சமயம் ஒரே தீர்வு என்று தெரிவித்துள்ளார்.



திஷாவுக்கு நீதி கிடைத்துவிட்டது என்றாலும் அந்த 4 பேரும் எளிதில் இறந்துவிட்டது பலருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் திஷா அனுபவித்த கொடுமைகளை அனுபவிக்காமல் இறந்துவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் போலீசுக்கு சல்யூட், இது தான் நீதி: ராதிகா, முருகதாஸ், ஜெயம் ரவி பாராட்டு

சமூக வலைதளங்களில் பெண்களை அதிலும் குறிப்பாக நடிகைகளை விளாசுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அவர்களை பற்றி அசிங்கமாக பேசுவது சாதாரணமாகிவிட்டது. இந்நிலையில் ஆன்லைனில் நடிகைகளை யாராவது தொந்தரவு (cyber bullying)செய்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மகாலட்சுமியின் கணவருக்கும், என் மனைவிக்கும் இடையே தான் கள்ளத்தொடர்பு: நடிகர் புகார்

மேலும் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட திஷாவை சமூக வலைதளங்களில் அசிங்கப்படுத்தி கமெண்ட் போட்ட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைனில் நடக்கும் இந்த அடாவடிக்கு உரிய தண்டனை கிடைக்கத் துவங்கிவிட்டதையும் சமந்தா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்