ஆப்நகரம்

”கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?”-விடை தெரிந்து கொள்ள விடுமுறை கேட்ட போலிஸ்காரர்..!

’பாகுபலி-2’ படம் பார்ப்பதற்காக விடுமுறை வேண்டும் என தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் விண்ணப்பித்துள்ள விடுமுறை கடிதம் வைரலாக பரவி வருகிறது.

TNN 26 Apr 2017, 12:28 pm
’பாகுபலி-2’ படம் பார்ப்பதற்காக விடுமுறை வேண்டும் என தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் விண்ணப்பித்துள்ள விடுமுறை கடிதம் வைரலாக பரவி வருகிறது.
Samayam Tamil telangana policeman asks leave to watch baahubali 2 on april 28
”கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?”-விடை தெரிந்து கொள்ள விடுமுறை கேட்ட போலிஸ்காரர்..!


இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி-2 திரைப்படம், நாளை மறுநாள் உலகம் முழுவதும் சுமார் 9000 தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது. வெளியான முதல் நாளே, பாகுபலி 2 படத்தை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக டிக்கெட் முன் பதிவு செய்வதற்கு தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் முண்டியடிக்கிறது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியைச் சேர்ந்த காவலர் ஒருவர், பாகுபலி 2 படம் பார்ப்பதற்காக விடுமுறைக்கு விண்ணப்பித்திருப்பது தெரிய வந்துள்ளது. விடுமுறை கடிதத்தில், ” கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.எனவே எனக்கு வரும் 28-ஆம் தேதி விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என விஜய் குமார் என்ற அந்த காவலர் தெரிவித்துள்ளார்.



இதே போல பாகுபலி முதல் பாகம் வெளியான போது, படம் பார்க்க விடுமுறை வேண்டும் என பள்ளி மாணவன் ஒருவர் எழுதிய கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவு கூறத்தக்கது.

Telangana policeman asks leave to watch Baahubali 2 on April 28

அடுத்த செய்தி

டிரெண்டிங்