ஆப்நகரம்

2000 ரூபாயை கலர் ஜெராக்ஸ் எடுத்த இளைஞர்கள் கைது..!

புதிய 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து விநியோகிக்க முயன்ற இளைஞர்களை தெலங்கானா மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

TNN 15 Nov 2016, 7:28 am
புதிய 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து விநியோகிக்க முயன்ற இளைஞர்களை தெலங்கானா மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil telangana youths caught with colour xerox copy of rs 2000 note
2000 ரூபாயை கலர் ஜெராக்ஸ் எடுத்த இளைஞர்கள் கைது..!


தெலங்கானாவின் மஹாபுபபாத் மாவட்டத்தில் உள்ள குருவை மண்டல் என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த பெட்ரோல் பங்குக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர்,தங்கள் வாகனத்திற்கு 200 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என தெரிவித்தனர்.பெட்ரோல் நிரப்பிய பின்னர் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் புதிய 2000 ரூபாயை கொடுத்துள்ளனர்.

அந்த நோட்டை பார்த்தபோது சாதாரண தாள் போல் இருந்துள்ளது.இதனால் சந்தேகமடைந்த ஊழியர் அந்த நோட்டு புதிய 2000 ரூபாயின் கலர் ஜெராக்ஸ் என கண்டறிந்தார்.இதனையடுத்து குருவை மண்டல் காவல்துறையினரிடம் அந்த இளைஞரை பெட்ரோல் பல்க் ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் 17 வயதான பிரதீப் என்பதும்,இவரின் நண்பரான அனில் என்பரும் இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்துள்ள காவல்துறையினர்,இருவரின் வீட்டிலும் வேறு ஏதும் இது போன்ற கலர் ஜெராக்ஸ் பிரதிகள் உள்ளதா என சோதனை நடத்தியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில்,2000 ரூபாய் நோட்டின் கலர் ஜெராக்சை கொடுத்து கடை ஊழியர் ஏமாற்றப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Telangana youths caught with colour xerox copy of Rs 2,000 note

அடுத்த செய்தி

டிரெண்டிங்