ஆப்நகரம்

வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல இளம் சீரியல் நடிகர்!

மும்பை: பிரபல இளம் இந்தி சீரியல் நடிகர் ராகுல் தீட்சித், வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 31 Jan 2019, 6:56 pm
சினிமா பார்ப்பதை மக்கள் மறந்தாலும், தினம் தினம் சீரியல் பார்ப்பதை மறக்கமாட்டார்கள். சில சீரியல்கள் மக்களின் மனதை தொட்டு விடுகிறது. அதனால் அதைத் தொடர்ந்து பார்க்க விரும்புகிறார்கள்.
Samayam Tamil rahul dixit.


அதேபோல் அந்த சீரியல்களில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் அதற்காக அவர்கள் கவலைப்படுவதும் உண்டு. சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களை தங்கள் வீட்டு பிள்ளை போலவே மக்கள் பாவிக்கிறார்கள்.

இதனாலேயே அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துப் போகிறார்கள். அப்படி ஒரு சீரியல் நடிகரின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இந்தியில் பல சீரியல்கள் நடித்து பிரபலமானவர் நடிகர் ராகுல் தீட்சித். இவருக்கு 28 வயதாகிறது. ராகுல் மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று (புதன் கிழமை) தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரின் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். ராகுல் இறப்பதற்கு முந்தைய நாள் நண்பர்களுடன் ஒரு பார்ட்டில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்