ஆப்நகரம்

அண்ணாத்த வில்லன் இவரா? 18 வருடங்களுக்கு பிறகு களமிறங்கும் நடிகர்

ரஜினி-சிவா கூட்டணி சேரும் அண்ணாத்த படத்தின் வில்லன் யார் என்பது பற்றி தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Mar 2020, 1:26 pm
ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நயன்தாராவும் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவரது கதாபாத்திரத்தை விட கீர்த்தி சுரேஷுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கிறது என கூறப்படுகிறது.
Samayam Tamil Rajinikanth Annaatthe


விஸ்வாசம் படத்திற்கு பிறகு சிவா இயக்கும் படம் இது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் தயாராகிறது.

மேலும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆனால் வில்லன் ரோலில் நடிக்கப்போவது யார் என்கிற தகவல் தற்போது வரை படக்குழு அறிவிக்காமல் இருக்கிறது.

முன்னணி தெலுங்கு நடிகர் கோபிசந்த் தான் அண்ணாத்த பட வில்லன் என தற்போது செய்தி பரவி வருகிறது. இது உண்மை என்றால் கோபிசந்த் 18 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார்.

ஜெயம் ரவியின் முதல் படமான ஜெயம் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் கோபி சந்த். அதை தொடர்ந்து தற்போது தான் அவர் தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார்.

ரஜினிகாந்தின் சமீபத்திய படங்களில் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் வில்லனாக நடித்திருந்தனர். 2.0ல் அக்ஷய் குமார், காலா படத்தில் நானா படேகர், பேட்ட படத்தில் சுனில் ஷெட்டி என ஹிந்தி நடிகர்களை தான் நடிக்க வைத்திருந்தனர். தற்போது சற்று மாறுதலாக தென்னிந்திய நடிகர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் சிவா.

அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் வட இந்தியாவில் சில இடங்களில் நடத்தப்போவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதால் இந்த திட்டத்தை கைவிட்டு ஹைதராபாத் ஸ்டூடியோவிலேயே செட் போட்டு எடுக்க முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்