ஆப்நகரம்

ஷூட்டிங்கில் அநாகரிகமாக நடந்து கொண்ட தெலுங்கு நடிகர்; சீறி எழுந்த நடிகை ராதிகா ஆப்தே!

தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நடிகர் குறித்து, நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 21 Mar 2018, 11:26 am
டெல்லி: தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நடிகர் குறித்து, நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்து கொண்டுள்ளார்.
Samayam Tamil Radhika Apte
ராதிகா ஆப்தே


நேஹா துபியாவுடன் BFFs with Vogue என்ற நிகழ்ச்சியில் நடிகை ராதிகா ஆப்தே, நடிகர் ராஜ்குமார் ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது திரைத்துறையின் ஆரம்பக் கட்டங்களில் எதிர்கொண்ட மோசமான சம்பவங்கள் குறித்து நேஹா துபியா கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நடிகை ராதிகா ஆப்தே, தொடக்க காலங்களில் தென்னிந்திய படங்களில் நடித்தேன். அவர்கள் நல்ல சம்பளம் வழங்குவார்கள். ஆனால் வேலை கடினமாக இருக்கும்.

இதையடுத்து தென்னிந்திய திரையுலகில் பாலினச் சமத்துவம் குறைவாக இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராதிகா ஆப்தே, நான் பணியாற்றிய படங்களில் பாலின சமத்துவம் இருந்ததில்லை.

தென்னிந்திய நடிகர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். ஒரு தெலுங்குப் படத்தின் முதல் நாள், ஒரு காட்சி படமாக்கப்பட இருந்தது. அதில் நான் உடல் நலமில்லாமல் படுத்திருக்க வேண்டும்.

அப்போது அங்கு நிறைய பேர் இருந்தார்கள். இந்த சூழலில் அங்கு வந்த பிரபல தெலுங்கு நடிகர், என் காலை வருடினார். அத்தனை பேர் முன் என்னை சீண்டியதை ஏற்க முடியவில்லை.

அவரைப் பார்த்து சீறினேன். என்னிடம் ஒருபோதும் இதுபோலச் செய்யாதீர்கள். ஒருபோதும் என்று கோபமாக கூறினேன்.

அவர் இதனை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதன்பிறகு அவர் அளித்த பேட்டியில், என்னிடம் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்று பேட்டியளித்தார் என ராதிகா ஆப்தே பகிர்ந்து கொண்டார்.

Telugu actor misbehaved with me says actress Radhika Apte.

அடுத்த செய்தி

டிரெண்டிங்