ஆப்நகரம்

ஆடம்பரம் வேண்டாம்... சிம்பிளா முடிச்சிக்கலாம்; திருமண திட்டத்தை மாற்றிய நடிகர்!

தெலுங்கு நடிகர் நிதின், தனது திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதை தவிர்த்து எளிய முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார்.

Samayam Tamil 28 Mar 2020, 8:19 am
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் நிதின். இவரது திருமணம் துபாயில் மிகவும் பிரம்மாண்டமாக வரும் ஏப்ரல் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, ஆடம்பர திருமணத் திட்டத்தை கைவிட்டு வீட்டிலேயே எளிமையான முறையில் நடத்தவுள்ளார்களாம்.
Samayam Tamil actor nitin


தமிழில் ஜெயம் ரவி நடித்த ஜெயம் படம் நல்ல வரவேற்பை பெற்றது நமக்கு தெரிந்ததுதான். அந்த படத்தின் ஒரிஜினல் தெலுங்கு வெர்சனில் நடித்தவர்தான் நிதின். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நிதின் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். ராம் கோபால் வர்மாவின் அக்யுத் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

இந்நிலையில் தான், நிதினுக்கும் ஷாலினி என்கிற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஹைதராபாத்தில் பெரிய அளவில் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்துதான் துபாயில் திருமணத்தை நடத்த திட்டமிட்டார்கள். கொரோனா பாதிப்பால் அவ்வளவு பெரிய செலவில் திருமணத்தை நடத்துவது குறித்து யோசித்த நிதின் எளிமையாக திருமணத்தை நடத்திவிட்டு, பின் ஆடம்பரமாக வரவேற்பு வைக்கலாம் எனும் முடிவுக்கு வந்துள்ளார்.

மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த திருமணத்தை தனது வீட்டிலேயே நடத்திக் கொள்ளலாம் எனவும், நடிகர்கள், பிரபலங்களை அழைக்க வேண்டாம் எனவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. கொரோனா பரவி வரும் சூழலில் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அவசியம் என்பதால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்