ஆப்நகரம்

விபத்தில் சிக்கிய பிரபல இளம் நடிகர்: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கு திரையுலகின் இளம்நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

Samayam Tamil 11 Sep 2021, 9:09 am
நடிகர் சீரஞ்சீவியின் சகோதரி மகனும், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராகவும் திகழ்பவர் சாய் தரம் தேஜ். தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம்நடிகரான சாய் தரம் தேஜ், நேற்றைய தினம் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஹைதராபாத்தில் உள்ள கேபிள் பாலத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து கடும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
Samayam Tamil Sai Dharam Tej
Sai Dharam Tej


தெலுங்கு திரையுலகில் ரே, சுப்பிரமணியம் பார் சேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சாய் தரம் தேஜ். இந்நிலையில் நேற்றைய தினம் விபத்துக்குள்ளான சாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் வலது கண் மற்றும் மார்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சாய்.

தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் சாய். விபத்து தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் சாய் தரம் தேஜ், சிரஞ்சீவி குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைவர் இஸ் பேக்: வேற லெவலில் வெளியான 'அண்ணாத்த' மோஷன் போஸ்டர்!
தெலுங்கு தயாரிப்பாளரும், சாய் தரம் தேஜ் மாமாவுமான அல்லு அரவிந்த் விபத்து குறித்து பேசும் போது, 'சாய் இரவு 7.30 மணிக்கு சாலை விபத்தில் சிக்கினார். அவர் இப்போது நலமாக உள்ளார். மருத்துவர்களிடம் பேசினேன். அவருக்கு தலை , முதுக்கெலும்புகளில் காயம் ஏதும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார். என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்' என கூறியுள்ளார்.

Sai Dharam Tej


தேஜ் விபத்தில் சிக்கிய செய்தியை அறிந்து நடிகர் பவன் கல்யாண், சிரஞ்சீவி உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் அல்லு அரவிந்த் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். ரசிகர்களும் அவர் விரைவில் மீண்ட வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்