ஆப்நகரம்

நடிகர்களுக்கு திடீர் வேண்டுகோள் விடுத்த சூப்பர்ஸ்டார்!

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு, சினிமா தொழிலாளர்களுக்காக 25 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

Samayam Tamil 28 Mar 2020, 3:47 pm
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சினிமா சூப்பர்ஸ்டார்கள் முதல், கலைஞர்கள், தொழிலாளர்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர். இதனால் பிரபலங்களும், கலைஞர்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு வருமானத்தில் கொஞ்சம் இழப்பு ஏற்படுகிறது. ஆனால் தொழிலாளர்கள் அப்படியல்ல.
Samayam Tamil maheshbabu

அவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் இல்லை என்றாலும் வாழ்வாதாரப் பிரச்சனை. இந்நிலையில், நடிகர்கள் பலர் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மகேஷ்பாபு தனது பங்குக்கு 25 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.



லாக்டவுண் சூழ்நிலையில், தினசரி சினிமா பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் என பங்குக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கிறேன். என் சக நடிகர்களும் இதுபோல் நிதியுதவி அளிக்க முன் வர வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தமிழகத்திலும் மற்ற மொழி திரையுலகிலும் பெரிய நடிகர்கள் தாமாகவே முன்வந்து சினிமா தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன், பிரகாஷ்ராஜ், ரஜினி, கமல், ஷங்கர் உள்ளிட்டோரும் தங்களது பங்குக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்