ஆப்நகரம்

இந்திய அளவில் முதலிடம் பிடித்த நேர்கொண்ட பார்வை: அஜித்துக்கு குவியும் பாராட்டு!

தல அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Samayam Tamil 12 Aug 2019, 6:44 pm
கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே மையப்படுத்திய இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாரதி கண்ட புதுமைப் பெண்களைப் போன்று ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் ஆண்ட்ரியா தைராங்க் ஆகியோர் இப்படத்தில் வலம் வந்தனர்.
Samayam Tamil 2L6A7107


Also Read: Sivakarthikeyan: மீரா மிதுன் பதிவிட்ட டுவீட்: சிவகார்த்திகேயன் மூலம் ரசிகர்களை சந்திக்கும் பிக் பாஸ் பிரபலம்!

இவர்களைத் தவிர மற்றவர்களது நடிப்பு அப்பப்போ காண முடிந்தது. எனினும், இவர்களது நடிப்பே படத்திற்கு பலமாகவும், பாலமாகவும் அமைந்தது. தல அஜித் சொல்லவே வேணாம். எல்லாவற்றையும் நின்னு, யோசித்து செயல்பட்டு தனக்கே உரிய பாணியில் வெற்றி கண்டுள்ளார். விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தல அஜித் கொடுத்த 2ஆவது வெற்றிப்படம் இது. இன்றுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், முதல் நாளில் ரூ.1.58 கோடியும், 2ம் நாளில் ரூ.1.17 கோடியும் வசூல் கொடுத்த இப்படம் 3ம் நாளில் சென்னையில் ரூ.1.38 கோடி வசூல் குவித்துள்ளது. மேலும், 4ம் நாளில் ரூ.1.42 கோடி வசூல் கொடுத்து ஒட்டுமொத்தமாக சென்னை சிட்டி பாக்ஸில் ரூ.5.5.5 கோடி வசூல் குவித்து விஸ்வாசம் சாதனையை முறியடித்துள்ளது. இதே போன்று தமிழக வசூலில் 4 நாட்கள் முடிவில் ஒட்டுமொத்தமாக இப்படம் ரூ.40 கோடி வரையில் வசூல் குவித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: Vijay: இதெல்லாம் ப்ரியமானவளே படத்துல வந்துருச்சு: தல சொன்ன “No means No” தளபதி சொன்ன வசனமாம்!

முதல் நாளில் தமிழகத்தில் ரூ.14 கோடி வரையில் வசூல் குவித்ததாக கூறப்படுகிறது. ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இப்படத்தைக் கண்டு அஜித்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தைத் தவிர கர்நாடகாவில் இப்படம் ரூ.2.68 கோடி வரையில் வசூல் கொடுத்துள்ளது. இந்திய அளவில் வசூலில் இப்படம் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இத்தனை வருட சமூகத்தின் மீது தனக்கிருந்த கோபத்தை தல அஜித் இப்படத்தின் மூலம் வெளிக்காட்டி சாந்தப்படுத்தியுள்ளார். ஆம், சமூகத்தில் நிலவும் அவலங்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Also Read: ரஜினிக்கு எதிராக கருத்து சொன்ன விஜய் சேதுபதி !!

எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்க வேண்டிய ஒரு தமிழ் படம். சமூகத்திற்கும், தனிமனித ஒழுக்கத்திற்கும், பெண்களுக்கும் இந்தப் படத்தின் மூலம் தல அஜித் எந்தவிதமான அறிவுரைகளை கொடுத்திருக்கிறார் என்பது எல்லாம் புரியவரும். இப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணில் அஜித் தனது 60ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.


ஆனால், அது உண்மை என்பது குறித்து அறிவிப்பு வெளியான பிறகு தெரியவரும். இப்படத்தில் அஜித்து ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா ஆகியோரில் யாரேனும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு போட்டியாக வெளியான நயன் தாராவின் கொலையுதிர் காலம் விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை படமாக கூறப்படுகிறது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்