ஆப்நகரம்

Ajith Fans: தியேட்டரில் சீட் கிடைப்பதில் தகராறு: ரசிகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் சீட் கிடைப்பதில், ஏற்பட்ட தகராறில் 2 ரசிகர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Jan 2019, 9:59 am
வேலூர் மாவட்டத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் சீட் கிடைப்பதில், ஏற்பட்ட தகராறில் 2 ரசிகர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil mass


இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள் வெறித்தனமாக உண்மையான விஸ்வாசமாக இருக்கும் நிலையில், திரையரங்குகளில் விஸ்வாசத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் ரசிகர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்கில் சீட் பிடிக்க ஏற்பட்ட தகராறில் பிரசாந்த் மற்றும் அவரது மாமா ரமேஷ் இருவரும் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து இருவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், பிரசாந்த் கவலைக்கிடமாக இருக்கிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று, வேலூர் மாவட்டம் காட்பாடியில் விஸ்வாசம் படம் பார்க்க தந்தை பணம் தராததால், தூங்கிக் கொண்டிருந்த தந்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க மகன் முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் அஜித்குமார்.

தல அஜித்தின் தீவிர ரசிகரான இவர், விஸ்வாசம் படம் பார்க்க பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முதல் நாள் முதல் ஷோ பார்க்க முடியாத விரக்தியில் இருந்த அஜித்குமார், பாண்டியன் தூங்கிக்கொண்டிருந்ததை அறிந்து அவரது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், படுகாயமடைந்த பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்