ஆப்நகரம்

Ajith: அஜித் ஒரு அற்புதமான மனிதர் : ரங்கராஜ் பாண்டே!

எல்லோரும் சொல்வது போல் அஜித், ஒரு அற்புதமான மனிதர்தான் என்று பிரபல பத்திரிகையாளரும், முக்கிய பிரமுகருமான ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Mar 2019, 3:49 pm
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் மிகவும் எளிமையானவர். யாரிடமும் ஏற்றத் தாழ்வு இல்லாமல் எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். சிறியவர் என பாராமல் எல்லோருக்கும் அன்பும், மரியாதையும் கொடுப்பார். மற்றவர்களுக்கு தேவையான உதவி தானாக அறிந்துகொண்டு செய்வார் என பலரும் சொல்வார்கள்.
Samayam Tamil rangaraj-pandy


தற்போது நடிகர் அஜித் ‘நேர் கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிக் அஜித் வக்கீலாக நடித்து வருகிறார். இவருடன் இணைந்து பிரபல பத்திரிகையாளரும், முக்கிய பிரமுகருமான ரங்கராஜ் பாண்டேவும் நடித்துள்ளார்.

அண்மையில் ரங்கராஜ் பாண்டே அளித்த பேட்டி ஒன்றில், ‘‘அஜித்துடன் நடித்தது அற்புதமான அனுபவம். எல்லோரும் சொல்வதுபோல அவர் அற்புதமான மனிதராக இருக்கிறார். மிகவும் ஆச்சர்யப்படும் வகையில் பழகுகிறார். பழக கூடியவர்களுக்கு உயிரையே அஜித் கொடுக்கும் மனநிலையில் இருக்கிறார். ஆச்சர்யங்கள் நிறைந்தவர். அதை நான் அனுபவித்திருக்கிறேன். 15 நாட்கள் அவருடன் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது ’’ என பாண்டே கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்