தல அஜித் நடிப்பில் கடந்த 8ம் தேதி அஜித்தின் சென்டிமெண்டாக பார்க்கப்படும் வியாழக்கிழமை வெளியானது நேர்கொண்ட பார்வை படம். சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை கொடுத்த இயக்குனர் ஹெச் வினோத் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தையும் கொடுத்துள்ளார். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இவர், தயாரித்துள்ள முதல் தமிழ் படம் இது. 7ஆவது முறையாக யுவன் சங்கர் ராஜா அஜித்துடன் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Also Read: Thala60: தல60 படத்தை மறைமுகமாக வெளிப்படுத்திய அஜித்!
அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், அபிராமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, ஆண்ட்ரியா தைராங்க் ஆகியோர் உள்பட 21 சினிமா பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 8ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியானது. பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் முழுக்க முழுக்க பெண் சுதந்திரம், பெண் உரிமை போன்ற பல கருத்துக்களை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.
எப்போதும் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் அஜித் இப்படத்தில் நடித்தது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. சமூகத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களை தனது மனதிற்குள் வைத்து சரியான நேரத்தில் அதன் கோபத்தை காட்டியுள்ளார். குறிப்பாக பொள்ளாச்சி சம்பவத்தைக் கூட கூறலாம். படத்தில் வரும் காட்சிகளும் அப்படி தான் தோன்றுகிறது. முதல் சண்டைக் காட்சியில் கூட, டாக்டர் கூறும் பல வருச கோபத்தை மொத்தமாக காட்டப்போறாரு என்று கூறியிருப்பார்.
Also Read: Athi Varadar: அத்தி வரதர் நினைத்தால் தான் சிம்பு கல்யாணம் முடியும்!!
இவ்வளவு ஏன் நீதிமன்றத்தில் அஜித் வாதாடும் போது கூட, இந்த சமூகத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கூறும் அந்த 4 (Rule 1, Rule 2, Rule 3 மற்றும் Rule 4) அறிவுரைகளை பெண்களோடு சேர்ந்து அவர்களது பெற்றோர்களும் தங்களது மகள்களை காப்பாற்ற கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
Also Read: ஒரே ஆண்டில் அஜித்தின் 2ஆவது வெற்றி: கோடி கோடியாய் வசூல் குவிக்கும் நேர்கொண்ட பார்வை!
இது ஒரு புறம் இருக்க, அஜித்தின் 60ஆவது படத்திற்கான அறிவிப்பும், அவரது சிறு வயது புகைப்படமும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் சென்னையில் ரூ.1.58 கோடி வரையில் வசூல் குவித்து ரஜினியின் பேட்ட ரூ.1.12 கோடி வரையில் மட்டுமே வசூல் குவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று விஸ்வாசம் படம் முதல் நாளில் ரூ.88 லட்சம் வரையில் மட்டும் வசூல் படைத்திருந்தது. விவேகம் ரூ.1.21 கோடியும், என்ஜிகே ரூ.1.03 கோடியும், எண்ட்கேம் ரூ.1.17 கோடியும் வசூல் குவித்திருந்தது.
2ம் நாளில் நேர்கொண்ட பார்வை படம் ரூ.1.17 கோடி வசூல் கொடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் முதல் நாளில் ரூ.14 கோடி வரையில் வசூலித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. ஆனால், ரஜினியின் 2.0 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2.64 கோடி மற்றும் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2.41 கோடி வசூல் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது.
எனினும், படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. என்னதான் பெண்களை மையப்படுத்திய படமாக இருந்தாலும் கூட பெண்களிடம் இருந்து ஆண்களைத் தான் காப்பாற்ற வேண்டும் என்று அஜித் கூறுவது, ஆண்களை விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார் என்பதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு ரசிகர்களை விட சினிமா பிரபலங்களைத் தான் வெகுவாக கவர்ந்துள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும், இப்படத்தை பார்க்கலாம் எனும் ஆசை தோன்றுகிறது. இப்படத்தின் ஆழத்தை வைத்து எத்தனை விதமாக தகவல்களை நாம் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Thala60: தல60 படத்தை மறைமுகமாக வெளிப்படுத்திய அஜித்!
அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், அபிராமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, ஆண்ட்ரியா தைராங்க் ஆகியோர் உள்பட 21 சினிமா பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 8ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியானது. பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் முழுக்க முழுக்க பெண் சுதந்திரம், பெண் உரிமை போன்ற பல கருத்துக்களை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது.
எப்போதும் பெண்களுக்கு மரியாதை அளிக்கும் அஜித் இப்படத்தில் நடித்தது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. சமூகத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களை தனது மனதிற்குள் வைத்து சரியான நேரத்தில் அதன் கோபத்தை காட்டியுள்ளார். குறிப்பாக பொள்ளாச்சி சம்பவத்தைக் கூட கூறலாம். படத்தில் வரும் காட்சிகளும் அப்படி தான் தோன்றுகிறது. முதல் சண்டைக் காட்சியில் கூட, டாக்டர் கூறும் பல வருச கோபத்தை மொத்தமாக காட்டப்போறாரு என்று கூறியிருப்பார்.
Also Read: Athi Varadar: அத்தி வரதர் நினைத்தால் தான் சிம்பு கல்யாணம் முடியும்!!
இவ்வளவு ஏன் நீதிமன்றத்தில் அஜித் வாதாடும் போது கூட, இந்த சமூகத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கூறும் அந்த 4 (Rule 1, Rule 2, Rule 3 மற்றும் Rule 4) அறிவுரைகளை பெண்களோடு சேர்ந்து அவர்களது பெற்றோர்களும் தங்களது மகள்களை காப்பாற்ற கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
Also Read: ஒரே ஆண்டில் அஜித்தின் 2ஆவது வெற்றி: கோடி கோடியாய் வசூல் குவிக்கும் நேர்கொண்ட பார்வை!
இது ஒரு புறம் இருக்க, அஜித்தின் 60ஆவது படத்திற்கான அறிவிப்பும், அவரது சிறு வயது புகைப்படமும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகம் முழுவதும் வெளியான இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் சென்னையில் ரூ.1.58 கோடி வரையில் வசூல் குவித்து ரஜினியின் பேட்ட ரூ.1.12 கோடி வரையில் மட்டுமே வசூல் குவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று விஸ்வாசம் படம் முதல் நாளில் ரூ.88 லட்சம் வரையில் மட்டும் வசூல் படைத்திருந்தது. விவேகம் ரூ.1.21 கோடியும், என்ஜிகே ரூ.1.03 கோடியும், எண்ட்கேம் ரூ.1.17 கோடியும் வசூல் குவித்திருந்தது.
2ம் நாளில் நேர்கொண்ட பார்வை படம் ரூ.1.17 கோடி வசூல் கொடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் முதல் நாளில் ரூ.14 கோடி வரையில் வசூலித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. ஆனால், ரஜினியின் 2.0 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2.64 கோடி மற்றும் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2.41 கோடி வசூல் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது.
எனினும், படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. என்னதான் பெண்களை மையப்படுத்திய படமாக இருந்தாலும் கூட பெண்களிடம் இருந்து ஆண்களைத் தான் காப்பாற்ற வேண்டும் என்று அஜித் கூறுவது, ஆண்களை விட்டுக்கொடுக்காமல் பேசியிருக்கிறார் என்பதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு ரசிகர்களை விட சினிமா பிரபலங்களைத் தான் வெகுவாக கவர்ந்துள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும், இப்படத்தை பார்க்கலாம் எனும் ஆசை தோன்றுகிறது. இப்படத்தின் ஆழத்தை வைத்து எத்தனை விதமாக தகவல்களை நாம் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.