ஆப்நகரம்

தகராறால் ‘பேட்ட’ படத்தின் பேனர் கிழிப்பு!

சென்னை திரையரங்கில் ‘பேட்ட’ படத்தின் பேனர்களை கிழித்து தகராறு செய்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.

Samayam Tamil 10 Jan 2019, 1:34 pm
இன்று ரஜினியின் ‘பேட்ட’ படமும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ரஜினி, அஜித் ரசிகர்கள் இடையே கருத்துமோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்க வளாகத்தில் உள்ள 6 ஸ்கிரினிலும் அதிகாலை 4 மணி காட்சியாக ‘பேட்ட’ படம் திரையிடப்பட்டது.
Samayam Tamil petta-viswasam


ஆனால் அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் திரையிடப்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தல அஜித்தின் ‘விஸ்வாசம்‘ படமும் 4 மணி காட்சியாக திரையிட வேண்டும் என்று கூறினர். ஆனால் இதற்கு திரையரங்க நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் கோபமடைந்த அஜித் ரசிகர்கள் தியேட்டரின் முன் வைக்கப்பட்டிருந்த ‘பேட்ட’ படத்தின் பேனர்களை கிழித்தெறிந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஜினி ரசிகர்கள், அஜித் ரசிகர்களை தடுக்க முயன்றதாகவும், இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

அஜித்தின் ‘விஸ்வாசம்‘ திரைப்படம் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் அதிகாலை 1.30 மணிக்காட்சி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி

டிரெண்டிங்