ஆப்நகரம்

துரோகப் புகார்: இரவோடு இரவாக பிரச்சனையை பேசித் தீர்த்த விஜய்

தலைவி பட பிரச்சனை தொடர்பாக இயக்குநர் ஏ.எல். விஜய் தன்னை நேரில் சந்தித்து பேசியதாக எழுத்தாளர் அஜயன் பாலா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Feb 2020, 3:55 pm
தலைவி பட பிரச்சனை தொடர்பாக இயக்குநர் ஏ.எல். விஜய் தன்னை நேரில் சந்தித்து பேசியதாக எழுத்தாளர் அஜயன் பாலா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil thalaivi issue al vijay meets ajayan bala
துரோகப் புகார்: இரவோடு இரவாக பிரச்சனையை பேசித் தீர்த்த விஜய்


தலைவி

ஏ.எல். விஜய் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, பூர்ணா உள்ளிட்டோரை வைத்து இயக்கி வரும் தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் தன் பெயர் போடவில்லை என்று எழுத்தாளர் அஜயன் பாலா ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். தன் நெருங்கிய நண்பரான விஜய் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், முதுகில் குத்திவிட்டதாகவும் கூறினார். மேலும் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும் கூறியிருந்தார். பின்னர் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார். இந்நிலையில் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

விஜய் துரோகம் செய்துட்டார், முதுகில் குத்திட்டார்: பிரபல எழுத்தாளர் குமுறல்


விஜய்

அஜயன் பாலாவின் போஸ்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. நேற்று சமூக வலைதளங்களில் விஜய் செய்தது குறித்து தான் பேச்சாக இருந்தது. இந்நிலையில் அஜயன் இன்று மீண்டும் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார். அந்த போஸ்ட்டில் அவர் கூறியிருப்பதாவது, நேற்று இரவு நண்பரும் இயக்குநருமான விஜய் இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு வந்து உதவி இயக்குநரின் கவனக்குறைவால் நடந்துவிட்ட பிசகுக்கு வருத்தம் தெரிவித்தார். சரியான அங்கீகாரம் இடம்பெற்ற திருத்தப்பட்ட விளம்பரத்தை காண்பித்தார் என்று தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சனை

இன்று ஹைதராபாத்திலிருந்து வரவிருக்கும் தயாரிப்பாளர் விஷ்ணுவுடன் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தை மூலம் சம்பளப் பிரச்சனைகள் முடிவை எட்டும் என நம்புகிறேன். இவ்விவரம் தொடர்பாக எனக்கு உடன் நின்ற ஊடக, இதழியல், முகநூல் நண்பர்களுக்கு இதயம் நெகிழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன் என்று அஜயன் பாலா தனது ஃபேஸ்புக் போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பாலா

தலைவி விவகாரம் தொடர்பாக நான் போஸ்ட் போடுவதால் சம்பள பாக்கி கொடுக்க மாட்டார்கள். நட்பிற்காகக் கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரிய வேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை என்று அஜயன் நேற்று தெரிவித்த நிலையில் அந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்