ஆப்நகரம்

அவர் பெட்டில் என்னை தூங்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர் ரஜினி: நடிகர் அரவிந்தசாமி!

நடிகர் ரஜினி, அவர் ரூம் பெட்டில் என்னை தூங்க வைத்து அழகு பார்த்தார் என்று நடிகர் அரவிந்தசாமி கூறியுள்ளார்.

Samayam Tamil 9 Oct 2018, 3:57 pm
‘ரோஜா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அரவிந்தசாமி. அதையடுத்து அவர் ரஜினிக்கு தம்பியாக ‘தளபதி’ படத்தில் கலெக்டராக நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது நடிகர் அரவிந்த்சாமி தெரியாமல் ரஜினியின் அறையில் தூங்கிவிட்டாராம்.
Samayam Tamil rajini


இது பற்றி சமீபத்தில் அரவிந்த்சாமி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பேட்டி ஒன்றில், “நான் ‘தளபதி’ படத்தில் ரஜினியுடன் நடித்தேன். அப்போது படப்பிடிப்பில் என்னுடைய சீன் இல்லாத நேரத்தில் ரஜினியின் அறை என்று தெரியாமல், அவர் தூங்கும் பெட்டில் அசந்து தூங்கிவிட்டேன்.

நான் எழுந்து கண் விழித்துப் பார்த்த போது ரஜினி என்னை எழுப்பாமல் அவர் தரையில் தூங்கிக் கொண்டிருந்தார். நான் தூங்குவதைப் பார்த்து எழுப்ப வந்த மேக்கப்மேனிடம் அவரை எழுப்ப வேண்டாம்; தூங்கட்டும் என்று ரஜினி கூறியிருக்கிறார். அவர் இயல்பாகவே சிறந்த மனிதர்’’ என்றார் அரவிந்தசாமி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்