ஆப்நகரம்

தளபதி விஜய்யின் பிகில் இசை வெளியீட்டு விழா மேடை இதுதானாம்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் அரங்கத்தின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

Samayam Tamil 19 Sep 2019, 5:01 pm
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் 3ஆவது முறையாக விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 3 மணிக்கு தொடங்கி பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Samayam Tamil Bigil


இந்த நிலையில் பிகில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் அரங்கத்தின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், பிகில் இசை வெளியீட்டு விழா வீடியோவையோ அல்லது புகைப்படத்தையோ யாரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளதாக, விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.


இதையெல்லாம் பெரிதாக நினைக்காமல், தளபதி விஜய்யின் பிகில் இசை வெளியீட்டு விழாவை கண்டு மகிழும் ஆர்வத்தோடு, பிகில் இசை வெளியீட்டு விழா அரங்கத்தை போட்டோ எடுத்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் என்ன பேசப்போகிறார் என்று கோடான கோடி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.



நேற்று இப்படத்தில் விஜய், நயன்தாரா காம்பினேசனில் உருவான உனக்காக என்ற ரொமாண்டிக் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கு முன்னதாக சிங்கப்பெண்ணே மற்றும் வெறித்தனம் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னிட்டு பொது இடங்களில் பேனர், கட் அவுட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அண்மையில், பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஐடி நிறுவன பெண் ஊழியர் சுபஸ்ரீ பலியானார். இதன் காரணமாக சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் பலரும் பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த செய்தி

டிரெண்டிங்