ஆப்நகரம்

துணை நடிகர் பிரிவில் விஜய்யை நாமினி செய்தது குறித்து ரசிகர்கள் கோபம்!

‘மெர்சல்’ படத்தில் நடித்த நடிகர் விஜய்யை துணை நடிகர் பிரிவில் சேர்த்த பிரிட்டன் விருது குழுவினர் மீது விஜய் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

Samayam Tamil 30 Mar 2018, 5:46 pm
‘மெர்சல்’ படத்தில் நடித்த நடிகர் விஜய்யை துணை நடிகர் பிரிவில் சேர்த்த பிரிட்டன் விருது குழுவினர் மீது விஜய் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
Samayam Tamil mersal


நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் படங்கள் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்குகளே கொண்டாடும். ஏனெனில் ரஜினிக்கு பிறகு விஜய்க்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது, இவருடைய படம் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு இருக்கும்.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில் பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது. அதே நேரத்தில் விஜய்யை சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினி செய்துள்ளனர், ‘மெர்சல்’ படத்தின் நாயகனே விஜய் தான். அப்படியிருக்க அவரை துணை நடிகர் பிரிவில் நாமினி செய்தது அவரை அசிங்கப்படுத்தும் நோக்கம் என்று கருதி விஜய் ரசிகர்கள் பிரிட்டன் விருது குழு மீது செம கோபத்தில் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்