ஆப்நகரம்

'ஐ ஆம் பேக்' என்று சொன்ன தவசி அண்ணா இறந்துட்டாரே: ரோபோ ஷங்கர் உருக்கம்

ஐ ஆம் பேக் என்று என்னிடம் சொன்ன தவசி அண்ணன் உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை என ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Nov 2020, 1:28 pm
கருப்பன் குசும்புக்காரன் என்கிற வசனம் மூலம் பிரபலமான நடிகர் தவசிக்கு உணவுக் குழாயில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. சிகிச்சை பெற பணம் இல்லை என்று கூறி கடந்த 16ம் தேதி உதவி கேட்டிருந்தார் தவசி. அவருக்கு சிவகார்த்திகேயன், சூரி, ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தார்கள்.
Samayam Tamil robo shankar


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி மரணம்: திரையுலகினர் இரங்கல்

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணன் தவசியின் சிகிச்சை செலவை ஏற்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தவசி உயிரிழந்தார். தவசி மருத்துவமனையில் இருந்தபோது ரோபோ ஷங்கர் அவரை பார்த்து பேசினார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது.

இந்நிலையில் ரோபோ ஷங்கர் தவசி பற்றி கூறியதாவது,

தவசி அண்ணாவை கடைசியாக பார்த்தவர்களில் நானும் ஒருவனாக இருக்கக்கூடும். நான் சந்தித்த பிறகு யார் எல்லாம் அவரை பார்த்தார்கள் என்று தெரியவில்லை. பல பிரபலங்கள் அவருக்கு உதவி செய்துள்ளனர். அவருக்கு உதவி செ்யத அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தவசி அண்ணா இறந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இது எப்படி சாத்தியம் என்று தோன்றியது. நான் அவரை இப்போத் தானே பார்த்துட்டு வந்தேன் என்று இருந்தது. ஐ ஆம் பேக் என்று அவர் என்னிடம் சொன்னாரே. மிகவும் கவலையாக இருக்கிறது.

கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவி செய்யுமாறு திரைத்துறையை சேர்ந்த நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். உங்களால் முடிந்த அளவுக்கு உதவுங்கள். அது போதும். அதுவே அவர்களுக்கு போதுமானதாகும். தவசி அண்ணாவுக்கு முன் கூட்டியே பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் அவர் நிச்சயம் புற்றுநோயில் இருந்து மீண்டிருப்பார். எனவே, முடிந்த ஆட்கள், தயவு செய்து உதவி செய்யுங்கள். தவசி அண்ணாவின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்