ஆப்நகரம்

அனிதாவின் நீதிக்காக ஒன்று கூடுவோம் – விஜய் சேதுபதி ஆவேசம்

அனிதாவின் போரட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி , லொயோலா கல்லூரியில் நடந்த அனிதாவின் இரங்கல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

TNN 3 Sep 2017, 10:50 pm
அனிதாவின் போரட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி , லொயோலா கல்லூரியில் நடந்த அனிதாவின் இரங்கல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
Samayam Tamil the actor vijay sethupathi speaks on loyola college for anitha
அனிதாவின் நீதிக்காக ஒன்று கூடுவோம் – விஜய் சேதுபதி ஆவேசம்


மறைந்த தமிழக மாணவி அனிதாவுக்கு, சென்னை லயோலா கல்லூரியில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் இயக்குனர் ரஞ்சித் மற்றும் திரை பிரமுகர்கள், மாணவ மாணாவியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்த இரங்கல் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது : நீதிக்காக நாம் போராடிப்போராடி போராட்டம் என்றாலே அரசுக்கு சலித்துவிட்டது .
எனவே தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து அனிதாவிற்கான போரட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் . நம் குழந்தைகளுக்கு அரசியல் கற்றுக்கொடுப்பது அவசியம் .

சினிமாவைப் பற்றி தெரிந்துகொள்வதைவிட அரசியலை பற்றித் தெரிந்துகொள்வதுதான் முக்கியம் என்று கூறினர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்