ஆப்நகரம்

துபாயில் ஏலத்திற்கு செல்லும் ஸ்ரீதேவி வரைந்த ஓவியம்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் ஒன்று துபாயில் ஏலம் விடப்படவுள்ளது.

Samayam Tamil 1 Mar 2018, 1:13 pm
மறைந்த நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம் ஒன்று துபாயில் ஏலம் விடப்படவுள்ளது.
Samayam Tamil the art of sri devi will come for auction in dubai
துபாயில் ஏலத்திற்கு செல்லும் ஸ்ரீதேவி வரைந்த ஓவியம்!


நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நிறைவு பெற்றன. குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை துவங்கி, பின் ரஜினி, கமல் உட்பட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் இறப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

நடிகை ஸ்ரீதேவி சிறந்த நடிகை மட்டுமின்றி நன்றாக ஓவியம் வரையக்கூடிவர். பல்வேறு படங்கள் வரைந்து அவற்றை பத்திரப்படுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் .நடிகை ஸ்ரீதேவி, நிதி திரட்டுவதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தன்னுடைய ஓவியம் ஒன்றை கொடுத்துள்ளார். அது விரைவில் துபாயில் ஏலத்திற்கு வரவுள்ளது. இந்த ஓவியம் சுமார் ரூ.10 லட்சத்துக்கு ஏலம் போகும் என கூறப்படுகிறது.

நடிகை ஸ்ரீ தேவி வரைந்த ஒவியம் நடிகை சோனம் கபூரை பார்த்து வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்