ஆப்நகரம்

கோர்ட்டில் பின்னி பெடலெடுத்த 'தல’: வேதனையை சாதனையாக்கும் நேர்கொண்ட பார்வை!

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை, வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கப்பட்ட காட்சியை வைத்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 7 Aug 2019, 10:24 am
தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ் படம் நேர்கொண்ட பார்வை. வரும் 8ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தைராங்க் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
Samayam Tamil nerkonda


குறுகிய கால இடைவெளியில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வெளியாகவுள்ளது. விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள 2ஆவது படம் நேர்கொண்ட பார்வை. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு என்று சிறப்பு காட்சி காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த பலரும், டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: Thala Ajith: இதுவரை பார்த்திராத தல அஜித்: நேர்கொண்ட பார்வை படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்!


இது குறித்து சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா என்பவரும் தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ”கடந்த சில ஆண்டுகளாக சமூகத்தில் என்ன நடந்துள்ளது என்பதை அஜித் உற்று நோக்கியுள்ளார். அதன் பிரதிபலிப்பு தான் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் டயலாக்காக வந்துள்ளது. இதுவரை வராத தமிழ் படமாக சமூக அக்கறை உள்ள படமாகவும் நேர்கொண்ட பார்வை அமைந்துள்ளது” என்றார். மேலும், இப்படத்திற்கு 4.5 வரை மதிப்பீடு கொடுத்துள்ளார்.

Also Read: Ajith Kumar: சிங்கப்பூரில் வெளியான தல அஜித்தின் நேர் கொண்ட பார்வை!


முதல் பாதியில் நீதிமன்றத்திற்கு வெளியில் அடாவடி காட்டி நடித்துள்ளார். 2ஆவது பாதியில் நீதிமன்றத்தில் வெறித்தனம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆண்கள் மற்றும் சமூகத்திற்கு உணர்வுப் பூர்வமான பல தகவல்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படங்களை கொடுப்பதில் இயக்குனர் வினோத் வெற்றி பெற்று வருகிறார். பிக் பாஸ் அபிராமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தைராங்க் ஆகியோர் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ரங்கராஜ் பாண்டே சிறப்பான நடிப்பின் மூலம் சினிமாவில் கால் பதித்துள்ளார் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Also Read: Ajith: சென்னை முழுவதும் 22 திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை!


மற்றொரு பதிவில், பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம். என்ன தான் ரீமேக் படமாக இருந்தாலும் பிங்க் படத்தை விட ரொம்பவே நன்றாக வந்திருக்கிறது. நீதிமன்ற காட்சியை காணும் போது உங்களை அறியாமல் நீங்கள் அழுதுவிடுவீர்கள் என்று தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மற்ற சினிமா விமர்சகர்களும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஏற்கனவே சிறப்புக் காட்சி பார்த்த சினிமா பிரபலங்களும் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.






அடுத்த செய்தி

டிரெண்டிங்