ஆப்நகரம்

நிஜ வாழ்க்கை கதையான ‘ஆண்டவன் கட்டளை’!

‘ஆண்டவன் கட்டளை’ படம் நிஜ கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 23 Jul 2016, 2:45 pm
‘ஆண்டவன் கட்டளை’ படம் நிஜ கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil the real life story turns as cinema
நிஜ வாழ்க்கை கதையான ‘ஆண்டவன் கட்டளை’!


டைரக்டர் மணிகண்டன் ‘குற்றமே தண்டனை’ படம் வெளிவருதற்கு முன்பே அடுத்த படமான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை எடுத்து முடித்து விட்டார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் மதுரை அன்புசெழியன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ரித்திகாசிங், பூஜா தேவரியா, நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே இசை அமைக்கிறார், சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் ‘காக்கா முட்டை’ படமாதிரி நிஜ வாழ்க்கை கதை. எந்த சினிமா பூச்சும் இல்லாத யதார்த்தமான கதை. எழுத்தாளர் அருள் செழியன் எழுதிய ஒரு குறுநாவலின் தழுவல் தான் படம். ஒரு அரசு பணிக்காக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது அதில் ஒரு விஷயத்தை தவறாக குறிப்பிட்டுவிட்டால் பின்னாளில் அதனால் ஏற்படும் விளைவுகளை காமெடியாக சொல்கிற படம்.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதிலிருந்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது வரை யாருமே சொந்தமாக செய்வதில்லை ஒரு புரோக்கரை வைத்துதான் செய்கிறோம். அந்த புரோக்கர் தவறு செய்தால் பாதிக்கப்படுவது நாம்தான் என்கிற உண்மையை சொல்கிற படம் ‘ஆண்டவன் கட்டளை’.

அடுத்த செய்தி

டிரெண்டிங்