நாகசைதன்யா, சமந்தா நிஜ காதல் ஜோடி மீண்டும் திரையில் ஜோடி சேர உள்ளனர்.
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவும் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் ஜோடிகளாக நடிக்கவுள்ளனர்.
இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகசைதன்யா நடித்து வரும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கவுள்ளதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் இறுதியில் ராகுல் ப்ரீத்தி சிங் அப்படத்தில் நாயகியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக அவரது காதலி சமந்தா நடிக்கவிருக்கின்றாராம். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்புகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. ‘மனம்’, ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய தெலுங்கு படங்களில் நாகசைதன்யாவுடன் சமந்தா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவும் விரைவில் காதல் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் ஜோடிகளாக நடிக்கவுள்ளனர்.
இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகசைதன்யா நடித்து வரும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கவுள்ளதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் இறுதியில் ராகுல் ப்ரீத்தி சிங் அப்படத்தில் நாயகியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக அவரது காதலி சமந்தா நடிக்கவிருக்கின்றாராம். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்புகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. ‘மனம்’, ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய தெலுங்கு படங்களில் நாகசைதன்யாவுடன் சமந்தா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.