ஆப்நகரம்

லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணத்தை கண்டுபிடிக்கும் ஸ்வேதா!

நடிகை ஸ்வேதா, மறைந்த லால்பகதூரின் மர்ம மரணம் குறித்து துப்பு துலக்கும் பத்திரிகையாளராக நடித்து வருகிறார்.

Samayam Tamil 17 Apr 2019, 4:15 pm
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய பாதுகாவலர்களால் சுடப்பட்டு இறந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. இதுபற்றி அடிக்கடி பேசப்பட்டாலும் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம்பற்றி அதிகம் பேசப்பட்டதில்லை.
Samayam Tamil swetha


1965ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் போர் முடிவுக்குபின் தாஸ்கண்ட் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் 1966ம் ஆண்டு சாஸ்திரி மரணம் அடைந்தார்.

தற்போது இந்த சம்பவம், ‘தி தாஸ்கண்ட் பைல்ஸ்’ பெயரில் படமாக்கப்ப்டடு வருகிறது. இந்தப் படத்தில் நடிகை ஸ்வேதா, ராகினி என்ற துப்பறியும் பத்திரிகையாளர் கேரக்டரில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் ‘ரா ரா’, ‘ஒரு முத்தம் ஒரு யுத்தம்’, ‘மெய்’, ‘சந்தமாமா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து அவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கடந்த ஆண்டு இவர் ராகுல் மிட்டல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஸ்வேதா, இந்தப் படம் பற்றி கூறுகையில், ‘‘நேர்மையான பத்திரிகையாளர்கள் அதிகார வர்கத்தினரால் நசுக்கப்படுகிறார்கள். அதற்கும் பயப்படாதவர்கள் திடீரென்று மாயமாகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள்.

இப்படத்தில் இணைவதற்கு முன் சாஸ்திரி வாழ்க்கைபற்றி எனக்கு அதிகம் தெரியாமலிருந்தது. பள்ளியில்கூட அவரைப் பற்றி அதிகம் படித்ததில்லை. இக்கால இளைஞர்கள் கேள்வி எழுப்புகிறார் கள். கேள்வி கேட்டாலொழிய நிலைமைகள் மாறாது’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்