ஆப்நகரம்

ஓடிடியில் வெளியான படங்களை திரையிட போவதில்லை: திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு!

ஓடிடி தளத்தில் ரீலிசாகும் படங்களை திரையரங்குகளில் வெளியிட போவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 2 Sep 2021, 2:41 pm
கொரோனா ஊரடங்கு சமயத்தில் திரையரங்குகள் முழுவதுமாக மூடப்பட்டு இருந்ததால், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டு வந்தனர். இதற்கு திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் எதிர்ப்புகளை எல்லாம் மீறி தொடர்ச்சியாக படங்கள் ஓடிடியில் வெளியாகின.
Samayam Tamil Theatre
Theatre


இநிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஓடிடி-யில் வெளியாகி வெற்றிபெற்ற படங்களை திரையரங்கில் விடுமாறு ரசிகர்களும் கோரிக்கை வைத்தனர். இதனால் சில தயாரிப்பாளர்களும் ஓடிடியில் வெளியான தங்களின் படங்களை திரையரங்குகளில் வெளியிட முனைப்பு காட்டி வந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், ஓடிடியில் வெளியான திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடப் போவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

டாக்டர் பெண்ணை கரம் பிடித்த 'சிக்ஸர்' பட இயக்குநர்: ஒன்றுகூடிய திரையுலக பிரபலங்கள்!
மேலும் திரையரங்கில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடி-யில் வெளியிடப்படும் என்றால் மட்டுமே ஒப்பந்தம் போடப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஓடிடி விற்பனைக்கான படங்களின் பிரிவியூ காட்சிக்கும் திரையரங்குகள் வழங்குவதில்லை என இந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். ஓடிடியில் வெளியான பெரிய படங்களை திரையரங்கில் காணலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்களின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்