ஆப்நகரம்

அஜித்திடம் உதவி கேட்டு கண்ணீர் விடும் நடிகர் தீப்பெட்டி கணேசன்!

அஜித்தின் பில்லா 2 படத்தில் நடித்திருந்த தீப்பெட்டி கணேசன் வறுமையில் இருக்கிறார். அஜித் சார் உதவி செய்ய வேண்டும் என கண்ணீருடன் அவர் உதவி கேட்டுள்ளார்.

Samayam Tamil 21 Apr 2020, 6:34 pm
ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பாப்புலர் ஆனவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil Theepetti Ganesan seeks help from Ajith Kumar


சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்யும் பணியில் இருந்தார். தனது மேனேஜர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறினார் அவர்.

தொடர்ந்து வறுமையில் வாடி வரும் அவருக்கு தற்போது கொரோனா லாக்டவுனில் எந்த வித வருமானமும் இல்லாததால் அவரது குடும்பம் வாடி வந்தது. அவருக்கு நடிகர் விஷால் தரப்பில் சமீபத்தில் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான் அனுப்பிவைக்கப்பட்டது. அதற்க்கு நன்றி கூறி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் அவர்.

தற்போது அவர் மேலும் ஒரு பேட்டியில் பேசும்போது தல அஜித்திடம் உதவி கேட்டு கண்ணீர் விட்டுள்ளார். அஜித்தை சந்திக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் என்ன விடவில்லை என கூறியுள்ளார்.

"என்னுடைய உண்மையான பெயர் கார்த்திக். ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் தீப்பெட்டி கணேசன் என்று தான் கூப்பிடுவார்கள். நான் எவ்வளவோ படங்கள் நடித்துவிட்டேன், ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்திக் என என் பெயரை கூப்பிட்ட ஒரே கடவுள் அஜித் சார் மட்டும் தான். ஏகப்பட்ட முறை அவரிடம் உதவி கேட்பதற்காக முயற்சித்தேன். அவரை ஒருமுறையாவது பார்த்துவிட முடியுமா என பல முறை முயற்சித்தேன். அஜித் சார் பார்த்தால் என் குழந்தைகளுக்கு எதிர்காலம் கிடைக்கும். இதுபற்றி அறிந்தால் அடுத்த நொடியே அஜித் கூப்பிட்டுவிடுவார். ஆனால் இதை யாரும் அவரிடம் கொண்டு சேர்ப்பதில்லை" என பேசியுள்ளார் அவர்.

இதை பார்த்த நடிகர் லாரன்ஸ் இந்த வீடியோவை அஜித் சாரின் மேனேஜருக்கு அனுப்பி இருப்பதாக கூறியுள்ளார்.

"அஜித் இரக்க குணம் கொண்டவர், நிச்சயம் உதவுவார். உங்கள் குழந்தைகளின் கல்விக்கு நானும் உதவுகிறேன்" என லாரன்ஸ் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்