ஆப்நகரம்

சல்மான் கான் தங்கை வீட்டில் திருட்டு!!

பாந்த்ராவில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை வீட்டில் ரூ. 3.25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைககள் மற்றும் பணம் திருட்டு போயுள்ளது.

TOI Contributor 23 Aug 2016, 10:47 am
பாந்த்ராவில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை வீட்டில் ரூ. 3.25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைககள் மற்றும் பணம் திருட்டு போயுள்ளது.
Samayam Tamil theft at salmans sister arpitas home cash goods worth rs 3 25 lakh stolen
சல்மான் கான் தங்கை வீட்டில் திருட்டு!!


மும்பை பாந்த்ராவில் பசிபிக் ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா வசித்து வருகிறார். அர்பிதா மற்றும் அரவது கணவர் ஆயுஷ் சர்மா இருவரும் கடந்த வாரம் விடுமுறையில் வெளியூர் சென்று இருந்தனர். ஞாயிற்றுக் கிழமை வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டில் இருந்த ரூ. 3.25 மதிப்புள்ள தங்க நகைகள் மறும் பணம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து,போலீசில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து கர் போலீஸ் நிலைய அதிகாரி கூறுகையில், ''அர்பிதா வீட்டில் பணிபுரிந்து வந்த ஆப்சா என்ற பணிப்பெண் கடந்த ஜூலை 30ஆம் தேதியில் இருந்து காணாமல் போயுள்ளார். அதுகுறித்து விசாரித்து வருகிறோம். மேலும், ஞாயிற்றுக் கிழமைக்கு முன்புதான் இந்த திருட்டு நடந்து இருக்க வேண்டும். ரூ. 2.25 லட்சமும், 10 கிராம் தங்கமும் காணாமல் போயுள்ளது'' என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்