ஆப்நகரம்

மீண்டும் இணையும் தெகிடி காம்போ!

அஷோக் செல்வனும் தெகிடி இயக்குநர் ரமேஷும் மீண்டும் இணைகிறார்கள்.

Samayam Tamil 21 Mar 2020, 9:21 am
2014ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் தெகிடி. இந்த படத்தில் அஷோக் செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கியவர் ரமேஷ். இவர்களின் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து படம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ashok


கொரோனா காரணமாக மற்ற படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு நடத்தப்படாத நிலையில், தெகிடி காம்போ இணையும் இந்த புதிய படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளைத் தொடங்கிவிடுவது எனவும், தடை நீக்கப்பட்டதும் ஷூட்டிங் செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தெகிடி போலவே இதுவும் த்ரில்லர் கதையாக உருவாகிறதாம். ஸ்கிரிப்ட்டை முழுமைபடுத்தும் வேலையில் இயக்குநர் முழு மூச்சில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தெகிடி வெளியானபோது உடனடியாக இந்த படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்படும் என பேச்சு கிளம்பியது. ரமேஷும் இது குறித்து பேசியிருந்தார். சீக்குவல் படம் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் உடனடியாக அல்ல என்றார் அவர். இப்போது ரசிகர்கள் தெகிடி படத்தின் இரண்டாம் பாகமா என யோசித்துக்கொண்டிருப்பார்கள், ஆனால் இது புதிய ஸ்கிரிப்ட் என்கிறது நமக்கு வந்த தகவல்.

அஷோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது மோகன்லாலின் மரைக்காயர் படத்தில் நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்