ஆப்நகரம்

கமலுக்கு பாராட்டு விழா: சரத்குமார், ராதாரவிக்கு அழைப்பில்லை – விஷால்

கமலின் பாராட்டு விழாவிற்கு சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோருக்கு அழைப்பு இல்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்.

TNN 7 Nov 2016, 5:50 pm
நடிகர் திலகம் சிவாஜிகணேசனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில் வரும் 27ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் அவருக்கு பாராட்டு விழா நடக்கயிருக்கிறது. இந்த விழாவிற்கு நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் முன்னணி திரைப்பட கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil there is no invitation for sarathkumar and radharavi vishal
கமலுக்கு பாராட்டு விழா: சரத்குமார், ராதாரவிக்கு அழைப்பில்லை – விஷால்


ஆனால், முன்னாள் நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லையாம். நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் இந்த நேரத்தில் அவர்களை அழைப்பது முறையல்ல என்பதால் அவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்