இனி தான் நடிக்கும் படங்களில் அரசியல் வேண்டாம் என்று ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், இப்படம் வெளியாகும் போது ரஜினிகாந்த் மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றுவிட்டார். இது போன்று ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் ரஜினி சென்னையில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Kaala Review: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'காலா' சினிமா விமர்சனம்
காலா படத்தில் ரஜினி பேசிய அரசியல் வசனங்கள் அவருக்கு மைனஸாக அமைந்தது. எனவே சர்ச்சையை தவிர்க்கும் விதமாக ரஜினி இப்படத்திலும், இனி வரும் படங்களிலும் அரசியலே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
இப்படத்தின் 30 நாட்கள் படப்பிடிப்பை முடித்த பிறகு சென்னை திரும்பும் ரஜினிகாந்த் அங்கு தனது நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். அதன் பிறகு கட்சி பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.