ஆப்நகரம்

செக்ஸ் தொல்லைக்கும், சினிமாவிற்கும் தொடர்பில்லை: டாப்ஸி அதிரடி

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி.

TNN 29 Mar 2017, 3:03 pm
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதனைத் தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா2, வை ராஜா வை போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது சென்னை வந்த அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
Samayam Tamil there is no reason between sexual crime and cinema says taapsee
செக்ஸ் தொல்லைக்கும், சினிமாவிற்கும் தொடர்பில்லை: டாப்ஸி அதிரடி


தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல கதை உள்ள படங்களில் நடித்துள்ளேன். பாலிவுட்டில் 6 படங்களில் நடித்து இருக்கிறேன். அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஷிவம் நாயர் இயக்கத்தில் நாம் சபானா என்ற பாலிவுட் படத்தில் பெண் உளவாளியாக நடித்துள்ளேன். இப்படம் வரும் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தமிழில் இப்படம் நான் தான் சபானா என்ற பெயரில் வெளியாகிறது.

இதில், அக்ஷய் குமார், பிரித்விராஜ், மனோஜ் பாஜ்பாய், அனுபம் கேர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிப்பதற்கு ஒரு வருடம் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றேன்.

சமூகத்தில் பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு சினிமா காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதனை ஏற்க முடியாது. சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றை ரசிகர்கள் பின்பற்ற வேண்டும். பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களே தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பாதுகாப்பாக தற்கொலைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.

பாலியல் தொல்லையிலிருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறேன். பாலியல் தொல்லையிலிருந்து தப்பிக்க பெண்கள் எதிர்த்து போராட வேண்டும். தொல்லை கொடுப்பவனை எதிர்த்து தாக்கி விரட்ட வேண்டும் என்று டாப்ஸி கூறியுள்ளார்.

There is no reason to sexual crime for cinema says taapsee.

அடுத்த செய்தி

டிரெண்டிங்