ஆப்நகரம்

புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 கதை ரெடி: செல்வராகவன்

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுவர் செல்வராகவன்.

TNN 30 Mar 2017, 6:02 pm
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வந்த காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்கள் செல்வராகவனின் திறமையை வெளிப்படுத்தின.
Samayam Tamil there is script for ao2 and pudupettai2 says selvaraghavan
புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 கதை ரெடி: செல்வராகவன்


இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் இவருக்கு தோல்விப்படங்களாக அமைந்தது. இவர் எடுத்த மற்ற படங்களை விட இந்தப் தோல்விப்படங்களே அதிகளவில் பேசப்பட்டது. திரைக்கு வந்த போது விமர்சத்துக்கு உள்ளானாலும் தற்போது ரசிகர்களிடம் நல்ல படங்கள் என்ற வரவேற்பைப் பெற்றுள்ளன.

A.O 2, pudhupettai 2.?yes. Don't worry. In those two years of gap, I also wrote sequels. But right now I have commitments👍👍👍 — selvaraghavan (@selvaraghavan) March 30, 2017 தற்போது இந்த படங்களின் இரண்டாம் பாகத்திற்கு உரிய கதையை உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இரண்டு வருடங்கள் சும்மா இருந்த நான் இந்தப்படங்களின் கதையை உருவாக்கியிருக்கிறேன்.

ஆனால், இப்போதைக்கு இப்படத்தை இயக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இவரது இயக்கத்தில் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை படம் உருவாகி திரைக்கு வரயிருக்கிறது. தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்