ஆப்நகரம்

திமிரு புடிச்சவன் கதை என்னோடது: பிரபல எழுத்தாளர் பகிரங்க குற்றச்சாட்டு!

திமிரு புடிச்சவன் திரைப்படத்தின் கதை என்னுடையது என்று பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்

Samayam Tamil 17 Nov 2018, 7:59 pm
திமிரு புடிச்சவன் திரைப்படத்தின் கதை என்னுடையது என்று பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil thimiru pudichavan.


நம்பியார் புகழ் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் ஆகியோரது நடிப்பில் நேற்று வெளியான படம் திமிரு புடிச்சவன். இப்படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் கதை என்னுடையது என்று பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து எழுத்தாளர் ராஜேஷ் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது:

இவர்கள் திருந்தவே மாட்டார்களா?

சென்ற வருடம் நான் oneindia வில் எழுதிய ஆன் லைன் தொடர் ஒன்+ஒன் =ஜீரோ தொடர்கதையின் அடிப்படை கருவான 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை Brian wash செய்து தமக்கு வேண்டாதவர்களை கொலை செய்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தேன்.

அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து

'திமிரு பிடித்தவன்' திரைப்படத்தை எடுத்துள்ளார்கள்.

இவர்கள் எப்போது திருந்துவார்கள்’.

இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்