ஆப்நகரம்

நடிகர் சல்மான் கானுக்கு கடைசி சம்மன்!

மகாராஷ்டிர மகளிர் ஆணையம் நடிகர் சல்மான் கானுக்கு கடைசி சம்மனை அனுப்பியுள்ளது

TOI Contributor 7 Jul 2016, 6:45 pm
மகாராஷ்டிர மகளிர் ஆணையம் நடிகர் சல்மான் கானுக்கு கடைசி சம்மனை அனுப்பியுள்ளது
Samayam Tamil third summon for salman khan
நடிகர் சல்மான் கானுக்கு கடைசி சம்மன்!


மும்பை: சுல்தான் படம் பற்றி நடிகர் சல்மான் கான் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். சுல்தான் ஷூட்டிங்கில் இருந்து திரும்பும்போது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் போன்று தான் உணர்ந்ததாக கூறினார். இதனால் பல தரப்பில் இருந்து பலத்த சர்ச்சை எழுந்தது. இந்த கருத்து தெரிவித்ததற்காக சல்மான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தின. ஆனால் சல்மான் கான் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இது தொடர்பாக மகாராஷ்டிரா மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு வழக்கறிஞர் மூலமாக பதிலளித்த சல்மான் கான் ஆஜராகவில்லை. 2வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கும் சல்மான் கான் ஆஜராகவில்லை. இதனையடுத்து 3வது முறையாகவும், கடைசி முறையாககவும் மகளிர் ஆணையம் சல்மான் கானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் ஜூலை 14ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் எனக்கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்