பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சனம் ஷெட்டி காதலர் தினத்தை ஒருவருடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார். அந்த நபரின் கையை பிடித்துக் கொண்டு சிரித்த முகமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வேலன்டைன் டின்னருக்கு நன்றி மோன் என தெரிவித்துள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் சனம் ஷெட்டி மீண்டும் காதலிக்கிறார், மோன் தான் அந்த காதலர் என்று பேசத் துவங்கிவிட்டனர். சனமின் புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதும் கூட சனம் மோன் பற்றி பேசியிருக்கிறார். அவரை புரிந்து கொண்ட ஒரு நல்ல காதலர் கிடைத்ததில் மகிழ்ச்சி. இனியாவது சனம் சந்தோஷமாக இருக்கட்டும்.
சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். அடுத்த கட்டத்திற்கு சென்று, சந்தோஷமாக வாழ்வது தான் பழிவாங்குவதற்கு சிறந்த வழி. இதை பார்த்து தர்ஷன் ஃபீல் பண்ண வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷனும், சனம் ஷெட்டியும் காதலித்தார்கள். தங்களுக்கு நிச்சயதார்த்தம் கூட நடந்துவிட்டது என்று கூறி புகைப்படங்களை வெளியிட்டார் சனம். தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக சனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பதிலுக்கு தர்ஷனும் சனம் மீது புகார் கூறினார். தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சனம் தன் முன்னாள் காதலருடன் விடிய, விடிய பார்ட்டி பண்ணியதாக தெரிவித்தார் தர்ஷன். தான் தர்ஷனுக்காக நிறைய செலவு செய்ததாக சனம் கூறினார்.
அவர்களின் பிரச்சனை ஓய்ந்த நிலையில் தான் சனம் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முன்னதாக தர்ஷனுடன் சேர்ந்து பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்தார் சனம். ஆனால் அவரின் விண்ணப்பத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதும் கூட சனம் மோன் பற்றி பேசியிருக்கிறார். அவரை புரிந்து கொண்ட ஒரு நல்ல காதலர் கிடைத்ததில் மகிழ்ச்சி. இனியாவது சனம் சந்தோஷமாக இருக்கட்டும்.
சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். அடுத்த கட்டத்திற்கு சென்று, சந்தோஷமாக வாழ்வது தான் பழிவாங்குவதற்கு சிறந்த வழி. இதை பார்த்து தர்ஷன் ஃபீல் பண்ண வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷனும், சனம் ஷெட்டியும் காதலித்தார்கள். தங்களுக்கு நிச்சயதார்த்தம் கூட நடந்துவிட்டது என்று கூறி புகைப்படங்களை வெளியிட்டார் சனம். தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக சனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பதிலுக்கு தர்ஷனும் சனம் மீது புகார் கூறினார். தான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சனம் தன் முன்னாள் காதலருடன் விடிய, விடிய பார்ட்டி பண்ணியதாக தெரிவித்தார் தர்ஷன். தான் தர்ஷனுக்காக நிறைய செலவு செய்ததாக சனம் கூறினார்.
அவர்களின் பிரச்சனை ஓய்ந்த நிலையில் தான் சனம் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முன்னதாக தர்ஷனுடன் சேர்ந்து பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்தார் சனம். ஆனால் அவரின் விண்ணப்பத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.