ஆப்நகரம்

விவாகரத்து ஆன போது அமலா பால் சொன்னது இது தான்..!

காதல் திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற பின் அமலா பால், நான் இன்னமும் இயக்குனர் விஜய்யை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Samayam Tamil 12 Jul 2019, 1:27 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். இவருக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. காதல் திருமணம் தான் என்றாலும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். விவாகரத்து குறித்து நடிகை அமலா பால் கூறுகையில், 18 வயதில் சினிமாவில் அறிமுகமான எனக்கு 23 வயதிலேயே திருமணம் நடந்தது. ஆனால், 24 வயதில் இருவரும் பிரிந்துள்ளோம். அப்போது எனக்கு அறிவுரை கூற யாரும் இல்லை.
Samayam Tamil mmy


பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு திருமணம்- குவியும் வாழ்த்துகள்!

என தவறுகள் மூலமாகவே எல்லாவற்றையும் நான் கற்றுக்கொண்டேன். எனது பிரிவுக்குப் பிறகு நான் அழுதேன். எனினும் இவற்றையெல்லாம், ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டேன். இயக்குனர் விஜய்யை இன்னமும் காதலிக்கிறேன். எப்போதும், அ ந்தக் காதல் இருக்கும். அவர், எப்போதும் எனக்கு ஸ்பெஷல் தான். அதே நேரத்தில் பிரிவும் காதல் தான். யாரும் பிரிவதற்காக திருமணம் செய்யமாட்டார்கள்.

இருவரும் பிரிவது குறித்து எடுத்த முடிவு என் வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒன்று தான். வாழ்க்கையில் எதையும் யாராலும் கணிக்கவே முடியாது. விஜய்யை திருமணம் செய்தது தவறான முடிவா என்று கேட்டால், இல்லை என்று தான் நான் சொல்வேன். எனது திருமணம், நான் யார் என்பதும், யாராக இல்லை என்பதையும் உணர்த்தியுள்ளது.

Malavika Raghunathan Michael Murphy Wedding: வைஷ்ணவ சம்பிரதாயப்படி நடந்த சுதாரகுநாதன் மகள் மாளவிகா திருமணம்



இப்போது தான் எனக்கு புரிகிறது. நான் தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன். இந்த தோல்வியால் நான் ஒரு போதும் உடைந்துபோகவில்லை. இந்த தோல்வியிலிருந்து நான் வெளியில் வருவேன். நான் யாருக்கும் தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது. எனது விவகாரத்தைத் தொடர்ந்து எனக்கு எனது குடும்பத்தினர் தான் ஆறுதலாக இருந்தார்கள்.
வீடு கூட இல்லாமல் தவிக்கும் நடிகை: என்னை காப்பாற்றுங்கள்: ஒரு நடிகையின் கதறல்!

நான் இன்னும் சினிமாவை விட்டு விலகவில்லை. எனது திருமணத்திற்குப் பிறகு வேலையில்லா பட்டதாரி படம் வெளியானது. எனது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து ஆகியவற்றைத் தொடர்ந்து திரையுலகம் என்னை மீண்டும் வரவேற்றுள்ளது என்று குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இயக்குனர் ஏ.எல். விஜய் இரண்டாவதாக ஐஸ்வர்யா என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். மிகவும் எளிமையான முறையில் நடந்த இந்த திருமண விழாவில், குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்