ஆப்நகரம்

என் மகன் தப்பு செஞ்சிருந்தால் தண்டிக்கணும்: இறந்த நடிகையின் மாமியார்

சஹானாவின் மரணத்தில் தன் மகனுக்கு தொடர்பு இருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று அம்மா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 May 2022, 11:21 am
சஹானாவின் மரணத்திற்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சஜத்தின் அம்மா கூறியிருக்கிறார்.
Samayam Tamil this is what sajads mother tells about sahana
என் மகன் தப்பு செஞ்சிருந்தால் தண்டிக்கணும்: இறந்த நடிகையின் மாமியார்


சஹானா

மாடலும், நடிகையுமான சஹானா சஜத் தன் 22வது பிறந்தநாள் அன்று பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கணவர் சஜத் தான் கொலை செய்துவிட்டதாக சஹானாவின் அம்மா தெரிவித்துள்ளார். சஹானாவை தற்கொலைக்கு தூண்டியதாக சஜத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சஜத்

சஜத்தின் அம்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜனவரி 25ம் தேதி தனிக்குடித்தனம் சென்றதில் இருந்து சஹானாவுடன் எனக்கு தொடர்பு இல்லை. அவர் என் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டார். என் மகனையே இரண்டு முறை தான் பார்த்தேன். திருமணமான ஒரு வாரத்திலேயே அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது என்றார்.

சண்டை

சஹானாவால் எங்களுடன் அட்ஜஸ்ட் செய்ய முடியவில்லை. ஒரு முறை சஜத்துடன் சண்டை போட்ட பிறகு சஹானா கத்தியுடன் நின்றதை பார்த்தேன். இதையடுத்து நீங்கள் என் வீட்டில் தங்க முடியாது. நான் சிறைக்கு செல்ல விரும்பவில்லை என்று என் மகனிடம் கூறினேன். தனிக்குடித்தனம் செல்லுமாறு நான் தான் கூறினேன் என்கிறார் சஜத்தின் அம்மா.

நகை

சஹானாவுக்கு 25 சவரன் நகை எல்லாம் போடவில்லை. என் மகன் தப்பு செய்திருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் சஹானாவின் மரணத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்களுடன் எனக்கு டச்சே இல்லாமல் இருந்தது என சஜத்தின் அம்மா மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்