ஆப்நகரம்

SA Chandrasekhar:'வாரிசு' விஜய் ஏன் வரல?: காரணத்தை சொன்ன அப்பா எஸ்.ஏ.சி.

தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் கலந்து கொள்ளாதது ஏன் என்று விளக்கம் அளித்திருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

Samayam Tamil 7 Jul 2022, 2:45 pm
தன் செல்ல மகன் விஜய் தன் பிறந்தநாள் விழாவுக்கு வராததன் காரணத்தை தெரிவித்துள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.
Samayam Tamil this is why vijay didnt attend my birthday party sa chandrasekhar
SA Chandrasekhar:'வாரிசு' விஜய் ஏன் வரல?: காரணத்தை சொன்ன அப்பா எஸ்.ஏ.சி.


எஸ்.ஏ.சி.

இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஜூலை 2ம் தேதி தன் பிறந்தநாளை கொண்டாடினார். மனைவி ஷோபாவுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை. இதை பார்த்தவர்கள், என்ன தான் அப்பா மீது கோபமாக இருந்தாலும் அதற்கென்று இப்படியா என விஜய்யை விளாசினார்கள்.

சதாபிஷேகம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு சதாபிஷேக விழா நடந்தது. அதிலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. மகன், மருமகள், பேரன், பேத்தி முன்பு நடக்க வேண்டிய விழா. ஆனால் அவர்கள் அனைவரும் இருந்தும் எஸ்.ஏ.சி.யின் சதாபிஷேகம் யாரும் இல்லாதவர் போன்று நடந்திருக்கிறது. படத்தில் மட்டும் தான் பெற்றோர் மீது பாசமா விஜய் என்று பலரும் விளாசினார்கள்.

வாரிசு

வாரிசு என்று குடும்ப சென்டிமென்ட் படத்தில் நடிக்கிறார் விஜய். அப்பாவுக்கு வருஷா வருஷம் சதாபிஷேகம் நடக்காது. அப்படி இருக்கும்போது வாரிசு பட இயக்குநர் வம்சியிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்து அப்பாவுடன் இருந்திருக்கலாம் என்கிறார்கள் சிலர். மேலும் சிலரோ, இது அப்பா, மகன் இடையேயானது. அது பற்றி பேச நமக்கு உரிமை இல்லை என்கிறார்கள்.

விஜய்

எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, ஜூலை 2ம் தேதி ஹைதராபாத்தில் ஷூட்டிங். அதனால் ஜூலை 1ம் தேதியே விஜய் ஹைதராபாத் சென்றுவிட்டார். ஷூட்டிங் இருந்ததால் தான் அவரால் என் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்