ஆப்நகரம்

அழ வைக்கிறீங்க எஸ்.பி.பி.: இந்த வீடியோவை பார்த்து அழாமல் இருக்க தான் முடியுமா?

எஸ்.பி.பி. பாடிய பாடல் வீடியோ ஒன்றை பார்த்தவர்கள் தங்களையும் அறியாமல் அழுகிறார்கள்.

Samayam Tamil 25 Sep 2020, 5:18 pm
கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மாரடைப்பால் இன்று மதியம் உயிரிழந்தார்.
Samayam Tamil spb


நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் எஸ்.பி.பி.யின் உடலுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது. இதை பார்த்தவர்கள் எஸ்.பி.பி.க்காக வானம் அழுவதாக தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.பி.யின் உடலுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி: வைரல் வீடியோ

இந்நிலையில் கேளடி கண்மணி படத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடி, அழுத வீடியோவை எடிட்டர் சுரேஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு அவர்களையும் அறியாமல் கண்ணீர் வருகிறது.
அது தான் எஸ்.பி.பி. குரலின் மகிமை. அவர் சிரித்தால் நாம் சிரிப்போம், அவர் அழுதால் நாம் அழுவோம். எஸ்.பி.பி. சிறந்த பாடகர் மட்டும் அல்ல திறமையான நடிகரும் கூட. அவர் பல படங்களில் நடித்து நம்மை அசத்தியிருக்கிறார்.

இதை எல்லாம் தாண்டி அவர் நல்ல மனிதர். புகழின் உச்சியை அடைந்தபோதிலும் தலைக்கனம் இல்லாமல் இருந்தவர் எஸ்.பி.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.பி. இறந்ததில் இருந்து பலர் வீடுகளில் அவர் பாடிய பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் மரணிக்கவில்லை எஸ்.பி.பி., உங்களின் குரல் மூலம் வாழ்கிறீர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்