ஆப்நகரம்

பாலாவுக்கு உதவிய அந்த மூன்று பேர்!

பாலா இயக்கவிருக்கும் அடுத்த படத்துக்காக மூன்று இயக்குனர்கள் திரைக்கதை எழுதி உதவியுள்ளனர்.

Samayam Tamil 18 Apr 2018, 11:50 am
பாலா இயக்கவிருக்கும் அடுத்த படத்துக்காக மூன்று இயக்குனர்கள் திரைக்கதை எழுதி உதவியுள்ளனர்.
Samayam Tamil varma


பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘நாச்சியார்’. இந்தப் படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் பாலா, விக்ரம் மகன் துருவ்வை வைத்து ‘வர்மா’ படத்தை இயக்கவுள்ளார்.இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்துக்கு இயக்குனர் ராஜு முருகன் வசனம் எழுதி வருகிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை நலன்குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா மற்றும் சீனிவாசன் ஆகியோர் எழுதி வருகினற்னர். இந்தப் படத்தை பாலா தயாரித்து இயக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்