ஆப்நகரம்

Simbu நயன்தாரா நல்லவர், அவர் மீது வெறுப்பு இல்லை: சிம்பு

நயன்தாரா பற்றி அவரின் முன்னாள் காதலரான சிம்பு முன்பு பேட்டி ஒன்றில் கூறியது பற்றி தற்போது பேச்சு எழுந்துள்ளது.

Samayam Tamil 4 May 2020, 6:37 pm
கொரோனா லாக்டவுனால் வீட்டில் முடங்கியுள்ளவர்கள் பழைய விஷயங்களை பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சிம்பு, நயன்தாராவின் காதல், காதல் முறிவு, பின்னர் நண்பர்களாக மாறியது குறித்து பேச்சு எழுந்துள்ளது.
Samayam Tamil simbu


வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்பு, நயன்தாரா இடையே காதல் ஏற்பட்டது. அதன் பிறகு அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். அதில் இருந்து சிம்பு சிங்கிளாக உள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் பேட்டி ஒன்றில் சிம்பு நயன்தாரா பற்றி பேசினார்.

நயன்தாரா பற்றி சிம்பு கூறியதாவது,

நயன்தாரா நல்ல மனுஷி. நாங்கள் வெறும் நண்பர்கள் தான். எங்களுக்கு இடையே இன்னும் காதல் இருப்பதாக கூறப்படுவது சரியல்ல. ஒரே துறையை சேர்ந்த எங்களுக்கு இடையே நல்ல நட்பு இருக்கிறது. நாங்கள் படங்கள், நண்பர்கள், வாழ்க்கை பற்றி பேசுவோம்.

நாங்கள் நடந்த விஷயத்தை எல்லாம் மறந்துவிட்டோம். ஒருவர் மீது மற்றொருவருக்கு வெறுப்பு கிடையாது என்றார்.

காதல் முறிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு சிம்புவும், நயன்தாராவும் சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.

சூர்யாவின் அருவா பட ஹீரோயின் நான் தான்: உண்மையை சொன்ன நடிகை

அடுத்த செய்தி

டிரெண்டிங்