ஆப்நகரம்

ஹன்சிகாவை கட்டிக்கிட்டு அஜித், ஷாலினி மாதிரி வாழ ஆசைப்பட்ட சிம்பு

ஹன்சிகாவை திருமணம் செய்து கொண்டு அஜித், ஷாலினி போன்று வாழ வேண்டும் என்று சிம்பு முன்பு தெரிவித்தது குறித்து தற்போது பேச்சு கிளம்பியுள்ளது.

Samayam Tamil 20 Apr 2020, 10:18 am
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருப்பவர்கள் பழைய விஷயங்களை பற்றித் தான் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் சிம்பு, ஹன்சிகாவின் காதல் பற்றியும் பேசத் துவங்கியுள்ளனர்.
Samayam Tamil simbu


வாலு படத்தில் நடித்தபோது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. அந்த பட வேலைகள் முடிவதற்குள் அந்த காதலும் முறிந்துவிட்டது. சிம்புவை காதலிப்பதாக ஹன்சிகா ஒப்புக் கொண்டார். ஆனால் அந்த காதல் முறிய நானோ, ஹன்சிகாவோ காரணம் இல்லை என்றார் சிம்பு.

ஹன்சிகாவை திருமணம் செய்து கொண்டு அஜித், ஷாலினி தம்பதி போன்று ஒற்றுமையாக வாழ விரும்புவதாக சிம்பு தெரிவித்தார். ஹன்சிகாவை தன் மனைவியாக்கும் சிம்புவின் கனவு கனவாக மட்டுமே இருந்துவிட்டது.

சிம்புவை பிரிந்த பிறகு ஹன்சிகா படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சிம்பு படங்கள் தவிர்த்து ஆன்மீகத்திலும் கவனம் செலுத்துகிறார்.

ஹன்சிகாவுக்கு முன்பு சிம்பு நயன்தாராவை காதலித்தார். அந்த காதலும் அவருக்கு கைகூடவில்லை. நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது, அதனால் தான் சிம்புவை பிரிந்தேன் என்று நயன்தாரா தெரிவித்திருந்தார்.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். இது தவிர்த்து சிம்பு ஹன்சிகாவின் காதலராக மஹா படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுனில் கள்ளத்தனமாக மது விற்ற திரௌபதி நடிகர் ரிஸ்வான் கைது

அடுத்த செய்தி

டிரெண்டிங்