துணிவு திரைப்படம்
அஜித்தின் துணிவு திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வங்கிகள் மக்களிடம் நடத்தும் கொள்ளையை துணிச்சலாக படமாக்கியிருக்கிறார் என பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். அஜித் அட்டகாசமாக நடித்திருப்பதாகவும் படத்தில் குறை என்று சொல்வதற்கே ஒன்றும் இல்லை என்றும், ஹெச் வினோத் மீண்டும் தன்னை நிரூபுத்துவிட்டார் என்றும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
Varisu, Vijay: வாரிசு சக்ஸஸ்... விஜய் வீட்டிற்கே சென்ற தில் ராஜு!
ரசிகர்கள் உற்சாகம்
ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் வாரிசு பொங்கல் என கொண்டாடினாலும் வாரிசு படத்தை விட துணிவு படம் டாப் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். இதனால் இது துணிவு பொங்கல்தான் என உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர் அஜித் ரசிகர்கள். இதனிடையே துணிவு படத்தில் நடித்த பிரபலங்கள் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
நம்பவே முடியவில்லை
அந்த வகையில் பிக்பாஸ் பிரபலங்களான அமீரும் பாவனி ரெட்டியும் துணிவு படத்தில் தாங்கள் நடித்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி துணிவு படத்தில் நடிக்க தங்களுக்கு அழைப்பு வந்த போது யாரோ கலாய்ப்பதற்காகதான் இப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தார்களாம். பின்னர் அது உண்மை என்று தெரிந்ததும் அவர்களால் நம்பவே முடியவில்லையாம்.
Vijay, Varisu: 'வாரிசை' விட்டுக்கொடுக்காத ஷோபா... என்ன செஞ்சிருக்கார் பாருங்க!
ஷூட்டிங் ஸ்பாட்
முதல் ஷூட்டிங் சென்றபோது இருவருக்கும் ரொம்பவே பதற்றமாக இருந்ததாம். அமீர் அஜித் அருகிலேயே அமர வேண்டு என்பதால் அசையவே மாட்டாராம். அஜித் பக்கத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பதை கூட அமீரால் நம்ப முடியாமல் இருந்தாராம். நடிகர் அஜித் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் அவ்வளவு அன்பாக நடந்து கொள்வாராம். தான் வரும்போது யாரும் எழுந்திரிக்க கூடாது என ஆர்டர் போட்டிருந்தராம் அஜித்.
ஃபெவிக்கால் போட்டு ஒட்டிடுவேன்
மீறி யாராவது எழுந்து நின்றால் ஃபெவிக்கால் போட்டு ஒட்டிவிடுவேன் என்றும் கூறுவாராம் அஜித். அஜித்துடன் பழகிய பிறகு பதட்டமே இல்லாமல் போய்விட்டதாக கூறிய அமீரும் பாவனியும் தங்களின காதல் விஷயம் நடிகர் அஜித்துக்கு இரண்டாவது நாளே தெரிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தங்களின் காதல் விஷயம் தெரிந்ததும், அஜித் தங்களை அழைத்து வாழ்கையில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, எப்படி வாழ்க்கையை கொண்டு போக வேண்டும் என இருவருக்கும் அறிவுரை கூறினாரார் என்றும் தெரிவித்துள்ளனர்.
மிகவும் அற்புதமான நாட்கள்
மேலும் அஜித்துடன் துணிவு படத்தில் நடித்த அந்த 15 நாட்களும் வாழ்க்கையில் மிகவும் அற்புதமான நாட்கள் என்றும் கூறியுள்ளனர். நடிகர் அஜித் அடுத்தாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஏகே62 படத்திலும் அமீர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏகே 62 படத்திற்கு அமீர்தான் கோரியோகிராஃப் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.