ஆப்நகரம்

டிக் டாக் புகழ் சிறுமி ஆருணி உயிரிழந்த சோகம்!

டிக் டாக் வீடியோ மூலம் மலையாளத்தில் தனக்கென்று ரசிகர்களை கொண்ட சிறுமி ஆருணி மர்ம நோயால் உயிரிழந்த சோகம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Jul 2019, 2:26 pm
மலையாளத்தில் தனது டிக் டாக் வீடியோ மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டவர் குழந்தை நட்சத்திரம் ஆருணி (9). இவர், 4ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஆருணி தலைவலி மற்றும் காய்ச்சலால பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மர்மமான நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
Samayam Tamil aa


இதையடுத்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி ஆருணி உயிரிழந்தார். ஆருணியின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு சௌதி அரேபியாவில் இவரது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

அடுத்த செய்தி

டிரெண்டிங்