ஆப்நகரம்

Me Too : படப்பிடிப்பில் நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!

பிரபல நடிகர் மோஹித் மல்கோத்ரா, படப்பிடிப்பின் போது நடிகை டினா தத்தாவிடம் கண்ட கண்ட இடங்களில் தொட்டு மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 4 Mar 2019, 5:37 pm
வெள்ளத்திரை அளவிற்கு சின்னத்திரை சீரியல்களும் மக்களிடத்தில் அதிகமாக சென்றடைகிறது. குறிப்பாக சில சீரியல்களில் ஹீரோ & -ஹீரோயின் இடையே நெருக்கம் அதிகமாக இருக்கும் காட்சிகள் வைப்பதும் சர்வ சாதாரண ஒன்றாகிவிட்டது.
Samayam Tamil tina-dutta


இந்நிலையில் ‘தாயன்’ என்ற இந்தி சீரியலில் ஹீரோவாக மோஹித் மல்கோத்ராவும், ஹீரோயினியாக நடிகை டினா தத்தாவும் நடித்து வருகின்றனர். இந்நலையில் அந்த சீரியலின் ஹீரோ மோஹித் மல்கோத்ரா படப்பிடிப்பின் போது நடிகை டினாவிடம் தகாத முறையில் கண்ட இடங்களில் கை வைத்ததாக கூறப்படுகிறது.

அந்த சம்பவத்தை நினைத்து நடிகை டினா மறுநாள் அழுது கொண்டிருந்தார். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, டினா தத்தா கூறியதாவது: “சீரியல் காட்சிகள் படமாக்கும் போது நடிகைகளுக்கு பல மோசமா சம்பவங்கள் நடக்கின்றன.

அதுபோலத்தான் எனக்கும் நடந்தது. இதுகுறித்து தயாரிப்பாளரிடம் முறையிட்டேன். இனி அப்படி நடந்தால் அனைவர் முன்னிலையில் கூறிவிடுங்கள் என கூறியுள்ளனர்” என்றார் நடிகை டினா தத்தா. இதன்மூலம் நடிகர் மோஹித் மல்கோத்ரா, தன்னிடம் தகாத முறையில் நடந்ததை உறுதி செய்துள்ளார் டினா தத்தா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்